- ஜீவசமாதி ஆலய திருப்பணிக்கு, தம்மால் இயன்ற நன்கொடையை அன்புடன் வழங்குவதால், அந்த சாதகன் உண்மையின் பாதையில் வரவேற்கப்படுகிறான்... இறைவனின் பிள்ளையாக ஏற்கப்படுகிறான்... கர்ம வினையெனும் நெஞ்சத்துயரம் நீங்கி கடவுளருள் எனும் நித்தியானந்தம் தோன்றத்துவங்குகிறது... மாசற்ற மனத்தினனாய் மாறுகின்றான்... அன்பும் அறனும் உடைத்து என்றென்றும் பரமானந்தத்தில் திளைப்பவனாகின்றான்.
- உடல்நலம், மனவளம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், குருவருளெனும் மெய்ஞானம் திருவருளெனும் சகல செல்வ யோகமிக்க ஞானப் பெருவாழ்வு எய்த வழி பிறக்கும்
- ஐயம் நீங்கும்... அகப்பொருள் விளங்கும்... வாழ்வாங்கு வாழ்வு வையத்துள் கிடைக்கும் ...உள்ளொளி பெருகும்... சத்தியம் நிலைக்கும்... உத்தம ஞான சித்தர்களின் உயிர் உறவு கிடைக்கும்...
- ஆல் போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... வாழையடி வாழையென ஞான வம்சமதைப் பெற்றிடுவன்....
- இன்னும்... இன்னும்... எத்தனையோ பேசவொண்ணா எழுதவொண்ணா பேரானந்த நிலைகள் தோன்றச் செய்யும், மகா திருப்பணி புண்ணியத்தில் பங்கு கொண்டு... மகா சித்தர்களின் அன்புக்கும் ,அருளுக்கும், தயவுக்கும் ,கருணைக்கும் பாத்திரமாவோம்....
வாருங்கள்..! அன்பு நெஞ்சங்களே..!
இரை தேடுவதோடு , இறையையும் தேடுவோம் ....
பல பணி இருப்பினும் , திருப்பணி செய்வோம்...
வாருங்கள்..! அன்பின் சொந்தங்களே..!